KADAI KANNAALEY LYRICS IN TAMIL
பெண்: அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினால்
பார்த்த நொடி யுகமாய் நீள
பதைபதைத்துக் கண் திறப்பேன்
பின்னும் ஆற்றமையால் அல்லலுற்று
கவண் வீசினால் கடை கண்ணாலே
பெண்: கடைக்கண்ணாலே ரசித்தேனே
கவின்பூவே கண்ணாளா
குடைக்குள்ளாடும் மழைக்காக
எதிர்பார்த்தேன் இந்நாளா
பெண்: கடைக்கண்ணாலே ரசித்தேனே
கவின்பூவே கண்ணாளா
குடைக்குள்ளாடும் மழைக்காக
எதிர்பார்த்தேன் இந்நாளா
பெண்: தரை நில்லா நில்லா இரு காலோடு
கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு
உறங்காமலே தொடரும் உன் ஞாபகம்
உயிர்த் தேடலில் இடறும் உன் பூமுகம்
பெண்: கண்ணாளனே… கண்ணாளனே…
உன்னிடமே… என் மனமே…
கடைக்கண்ணாலே ரசித்தேனே
கவின்பூவே கண்ணாளா
பெண்: அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினால்
பெண்: ஒளிந்தேன் மறைந்தேன்
எதைப் பார்த்தும் நான்
உனைச் சேர்ந்த பின்பு
பயம் நீங்கினேன்
பெண்: படர்ந்தேன் அலைந்தேன்
கொடி போல நான்
மணிமார்பில் சாய்ந்து
மலர் சேர்க்கிறேன்
பெண்: விழியை இமையை
விரித்தே உனை என்
இளமையின் அரண்மனை
வரவேற்குதே
பெண்: விரலை நகத்தைக்
கடித்தே எழுதும்
கவிதையை இதழ்களும்
அரங்கேற்றுதே
பெண்: இந்த நொடி போதும் தேனே
சிந்தி உறைந்தேனே நானே
உடலும் உயிரும் மெழுகாய் உருகும்
கண்ணாளனே… கண்ணாளனே…
உன்னிடமே… என் மனமே…
பெண்: கடைக்கண்ணாலே ரசித்தேனே
கவின்பூவே கண்ணாளா
குடைக்குள்ளாடும் மழைக்காக
எதிர்பார்த்தேன் இந்நாளா
பெண்: தரை நில்லா நில்லா இரு காலோடு
கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு
உறங்காமலே தொடரும் உன் ஞாபகம்
உயிர்த் தேடலில் இடறும் உன் பூமுகம்
பெண்: கண்ணாளனே… கண்ணாளனே…
உன்னிடமே… என் மனமே…
கடைக்கண்ணாலே ரசித்தேனே…